போதை விருந்தில் கலந்துகொண்டிருந்த இளைஞனும், யுவதியும் பலி! மிதமிஞ்சிய போதை நுகர்வால் நடந்த பயங்கரம்...

ஆசிரியர் - Editor I
போதை விருந்தில் கலந்துகொண்டிருந்த இளைஞனும், யுவதியும் பலி! மிதமிஞ்சிய போதை நுகர்வால் நடந்த பயங்கரம்...

கொழும்பு தாமரைக் கோபுரத்துக்கு அருகில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வொன்றில் இடம்பெற்ற விருந்தில் கலந்துகொண்ட இருவர் உயிரிழந்துள்ளனர். 

27 வயதுடைய யுவதி ஒருவரும் 22 வயதுடைய இளைஞனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.இந்த விருந்தின்போது அவர்கள் போதைப்பொருள் உட்கொண்டதாக கூறப்படுகிறது.

இதன்போது இருவரும் சுகவீனமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.உயிரிழந்த இருவரின் நீதிவான் விசாரணைகள் மாளிகாகந்த நீதிவானால் முன்னெடுக்கப்பட்டன. 

இதன்போது இவர்களின் பிரேத பரிசோதனைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, தனது மகளின் மரணத்தில் சந்தேகம் காணப்படுவதாக உயிரிழந்தவரின் தாய் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். குறித்த விருந்தில் உயிரிழந்த யுவதி உட்பட 7 பேர் போதைப்பொருளை உட்கொண்டதாகவும், 

அவரது காதலன் என கூறிக்கொள்ளும் இளைஞர் ஒருவரும் போதைப்பொருளை உட்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சம்பவம் தொடர்பில் மருதானை பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு