கோப்பாய் - செல்வபுரம் கிராமத்தில் மதுபானம் விற்ற பெண் கைது!

ஆசிரியர் - Editor I
கோப்பாய் - செல்வபுரம் கிராமத்தில் மதுபானம் விற்ற பெண் கைது!

யாழ்ப்பாணம் - கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வபுரம் பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலேயே 20 லீட்டர் சட்டவிரோத மதுபானத்துடன் அந்த பெண் கைதாகியுள்ளார். 

சந்தேகநபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு