நிறைவெறியில் கூகுள் map பார்த்துக்கொண்டு அலரி மாளிகைக்குள் நுழைய முயன்ற இருவர் கைது!

ஆசிரியர் - Editor I
நிறைவெறியில் கூகுள் map பார்த்துக்கொண்டு அலரி மாளிகைக்குள் நுழைய முயன்ற இருவர் கைது!

மது அருந்திவிட்டு கூகிள் வரைபடத்தை நம்பி பயணித்த நிலையில் அலரிமாளிகை வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்த இருவர் சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டனர்.

கணனி மென் பொறியியலாளர் மற்றும் கடலோடி ஆகிய இருவரும் கொள்ளுப்பிட்டியில் உள்ள இரவு விடுதிக்கு சென்று மது அருந்தியதாகவும் முஹந்திரம் வீதியில் உள்ள தங்குமிடத்திற்கு திரும்ப முயற்சித்ததாகவும் 

கூகுள் வரைபடத்தை நம்பியிருந்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், வழிகாட்டுதல்கள் அவர்களை அலரி மாளிகையின் சுற்றுச்சுவருக்கு அருகில் ஒரு முட்டுச்சந்திற்கு செல்ல வழிகாட்டியுள்ளது. 

தங்கள் வழியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில், அவர்கள் சுவரைக் கடந்து அலட்சியமாக அலரிமாளிகை வளாகத்திற்குள் நுழைந்துள்ளனர்.

இதையடுத்து பிரதமரின் பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் குறித்த இருவரையும் கைது செய்து கொள்ளுப்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் இவர்களை கைது செய்து கோட்டை நீதவான் முன்னிலையில் நிறுத்தப்பட்ட போது இருவருக்கும் பிணை வழங்கியுள்ளார்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு