பொலிஸாரை கண்டதும் கழிவு வாய்க்காலுக்குள் பாய்ந்த பெண்! பொலிஸாருக்கே சவால், மணிக்கணக்கில் போராடி கைது செய்த பொலிஸார்...

ஆசிரியர் - Editor I
பொலிஸாரை கண்டதும் கழிவு வாய்க்காலுக்குள் பாய்ந்த பெண்! பொலிஸாருக்கே சவால், மணிக்கணக்கில் போராடி கைது செய்த பொலிஸார்...

மட்டக்குளியில் கதிரானவத்தை குடு ராணி என அழைக்கப்படும் 45 வயதுடைய பெண் ஒருவரை பெரும் முயற்சியின் பின்னர் பொலிஸார் நேற்று (03) கைது செய்துள்ளனர்.

யுக்திய நடவடிக்கையின் கீழ் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் விசேட பணியக அதிகாரிகள் குறித்த பெண்ணின் வீட்டை சோதனையிட்ட போது, ​​

அவர் அருகில் இருந்த கழிவு நீர் கால்வாயில் குதித்துள்ளார்.பின்னர் மேலதிக பொலிஸ் அதிகாரிகள் குழு, சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.

குறித்த பெண்ணிடம் இருந்து 5 லட்சம் ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள போதை பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு