சாந்தனின் புகழுடல் யாழ்ப்பாணம் - வடமராட்சி மண்ணில்...

ஆசிரியர் - Editor I
சாந்தனின் புகழுடல் யாழ்ப்பாணம் - வடமராட்சி மண்ணில்...

மறைந்த தில்லையம்பலம் சுதேந்திரராஜாவின் (சாந்தன்) புகழுடல் ஊர்தி தற்போது யாழ்ப்பாணம் வடமராட்சியை வந்தடைந்தது.

வவுனியாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8மணியளவில்  மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்ட சாந்தனின் புகழுடல் ஊர்தி ஏ9 வீதி ஊடாக மாங்குளம் -  கிளிநொச்சி ஊடாக நகர்ந்து அஞ்சலிக்கு வைக்கப்பட்டு யாழ்ப்பாணத்திற்கு எடுத்துவரப்பட்டது.

இந்தியாவின் தமிழகத்தில் உயிரிழந்த சாந்தனின் பூதவுடல் உடற்கூற்றுப் பரிசோதனை முடிக்கப்பட்டு உறவினர்களிடம் நேற்று (02) மாலை கையளிக்கப்பட்டுள்ளது.

இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுவிக்கப்பட்ட சாந்தன், திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தார்.

அவர் இலங்கை திரும்பலாம் என கடந்த 24 ஆம் திகதி இந்திய மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது.

இந்நிலையில், கல்லீரல் செயலிழப்பு காரணமாக சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சாந்தன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 28ம் திகதி மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்தார்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு