இத்தாலியில் வேலைவாய்ப்பு! மோசடியில் ஈடுபட்டுவந்த பெண் உட்பட இருவர் கைது..

ஆசிரியர் - Editor I
இத்தாலியில் வேலைவாய்ப்பு! மோசடியில் ஈடுபட்டுவந்த பெண் உட்பட இருவர் கைது..

இத்தாலியில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் உட்பட இருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இத்தாலி தூதரகத்துக்குச் சேவைக்காக வரும் நபர்களிடம் இத்தாலியில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி வெளியாட்கள் பணம் பெற்று மோசடியில் ஈடுபடுவதாக இத்தாலிய தூதரகம் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளின்படி சந்தேக நபர்கள் 26 இலட்சம் ரூபாவை மோசடி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

50 வயதுடைய பெண் ஒருவரும் 52 வயதுடைய ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் நாரஹேன்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு