பாடசாலையில் புதிதாக சேர்ந்த மாணவன் மீது தாக்குதல், யாழ்.வடமராட்சியில் உள்ள பாடசாலை ஒன்றில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
பாடசாலையில் புதிதாக சேர்ந்த மாணவன் மீது தாக்குதல், யாழ்.வடமராட்சியில் உள்ள பாடசாலை ஒன்றில் சம்பவம்..

யாழ்ப்பாணம் வடமராட்சியில் தரம் 6க்கு புதிதாக இணைந்த மாணவனை மீது தரம் 10இல் கல்வி கற்கும் சில மாணவர்கள் தாக்கியுள்ளனர். 

இதனால், காதிலிருந்து இரத்தம் கசிந்த நிலையில், தாக்கப்பட்ட மாணவன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளான்.

நெல்லியடி பகுதியிலுள்ள பாடசாலையொன்றிலேயே கடந்த வியாழக்கிழமை (22) இந்தச் சம்பவம் இடம்‍பெற்றது. அந்த பாடசாலையில் புதிதாக இணைந்த மறுநாளே மாணவன், பிற மாணவர்களால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

இந்த தாக்குதல் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோரால் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு