தென்னங்கோம்பைகளை ஏற்றி வந்த "பட்டா" வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீட்டு மதிலுடன் மோதி விபத்து..

ஆசிரியர் - Editor I
தென்னங்கோம்பைகளை ஏற்றி வந்த

தென்னங்கோம்பைகளை ஏற்றி வந்த "பட்டா வாகனம்" ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மதிலை உடைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த சம்பவம் யாழ்.சாவகச்சேரி நுணாவில் A9 வீதியில் நேற்று பிற்பகல் 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் வாகனத்தின் சாரதி காயமடைந்துள்ளார்.

சாவகச்சேரியிலிருந்து தென்னங்கோம்பைகளை ஏற்றிக்கொண்டு யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பட்டா வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு