யாழில் இடம்பெற்ற பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நபர் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் கைது!

ஆசிரியர் - Editor I
யாழில் இடம்பெற்ற பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நபர் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் கைது!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் ஒருவர் தமிழகத்தில் தலைமறைவாகி இருந்து, மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பிய வேளை நேற்றைய தினம் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேகநபர் சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணம் திரும்புவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , விமான நிலைய வளாகத்தில் காத்திருந்த பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர். 

யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனவும் , நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த நிலையில், சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் திரும்புவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேக நபரை கைது செய்து உள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். 

சந்தேக நபரை பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு