யாழ்.ஆவரங்காலில் வீதியால் பயணித்த முச்சக்கர வண்டியை வழிமறித்து வன்முறை கும்பல் அட்டகாசம்...

ஆசிரியர் - Editor I
யாழ்.ஆவரங்காலில் வீதியால் பயணித்த முச்சக்கர வண்டியை வழிமறித்து வன்முறை கும்பல் அட்டகாசம்...

யாழ்ப்பாணத்தில் இருந்து ஆவரங்கால் பகுதியை நோக்கி பயணித்துக்கொண்டிந்த முச்சக்கர வண்டியை வன்முறை கும்பல் ஒன்று வீதியில் இடைமறித்து தாக்குதல் மேற்கொண்டுள்ளது. 

முச்சக்கர வண்டி சாரதியை தாக்க முற்பட்ட வேளை , சாரதி அவல குரல் எழுப்பவே அயலவர்கள் கூடியதால், தாக்குதலை நடத்தியவர்கள் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடியுள்ளனர்.

சம்பவத்தில் முச்சக்கர வண்டியின் முன் பக்க கண்ணாடி முற்றாக சேதமடைந்துள்ளது.இந்த சம்பவம் தொடர்பில் முச்சக்கர வண்டியின் சாரதி அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு