போதைக்குப் பணம் கேட்டு அட்டகாசம் புரிந்த மகனை சுத்தியலால் அடித்தே கொன்ற தந்தை - கைது..

ஆசிரியர் - Editor I
போதைக்குப் பணம் கேட்டு அட்டகாசம் புரிந்த மகனை சுத்தியலால் அடித்தே கொன்ற தந்தை - கைது..

போதைப்பொருள் பாவனைக்காக பணம் கேட்டு தனது தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மகனை சுத்தியலால் தாக்கி கொலை செய்த தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் கும்புக்கெட்டிய, வெல்கல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.இவ்வாறு உயிரிழந்தவர் 30 வயதுடைய போதைப்பொருளுக்கு அடிமையான ஒருவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் போதைப்பொருள் பாவனைக்காக பணம் கேட்டு தனது தந்தையுடன் தினமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இவர் நேற்று (18) வழமைப்போல போதைப்பொருள் பாவனைக்காக பணம் கேட்டு தனது தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். 

இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியதில் தந்தை , தனது மகனை சுத்தியலால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

 இதனையடுத்து சந்தேக நபரான 60 வயதுடைய தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர் . இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை 

 கும்புக்கெட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு