யாழ்.மாவட்டத்தில் மட்டும் 2 மாதங்களில் 250 போதைப் பொருள் தொடர்பான வழக்குகள் பதிவு!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் மட்டும் 2 மாதங்களில் 250 போதைப் பொருள் தொடர்பான வழக்குகள் பதிவு!

யாழ்ப்பாணத்தில் கடந்த இரண்டு மாத கால பகுதியில் சுமார் 250 போதைப்பொருள் தொடர்பிலான வழக்குகள் நீதிமன்றங்களில் தொடரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கடந்த டிசம்பர் மாதம் முதல் இந்த மாதம் வரையிலான காலப்பகுதியில் யாழ்.மாவட்டத்தில் போதைப்பொருளுக்கு எதிராக பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நடவடிக்கைகளில், 

போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்தமை , கடத்தி சென்றமை , விற்பனை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் 

250 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு