வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள 7 ஆலயங்களை மட்டும் வழிபட இராணுவம் நிபந்தனையுடன் அனுமதி!

ஆசிரியர் - Editor I
வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள 7 ஆலயங்களை மட்டும் வழிபட இராணுவம் நிபந்தனையுடன் அனுமதி!

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேச செயலக பிரிவில் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள 21 ஆலயங்களில் 07 ஆலயங்களுக்கு சென்று வழிபாடு நடத்த இராணுவத்தினர் கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கியுள்ளனர். 

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் உள்ளிட்ட 07 ஆலயங்களுக்கு சென்று வழிபடவே இராணுவத்தினர் அனுமதித்துள்ளனர். 

ஆலய வழிபாடுகளுக்கு செல்ல விரும்புவோர் , தமது பெயர், விலாசம் ,அடையாள அட்டை இலக்கம் , தொலைபேசி இலக்கம் என்பவற்றை ஆலய நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்குமாறும், 

நிர்வாகத்தினர் விபரங்களை மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகம் என்பவற்றில் கையளிக்குமாறு கோரப்பட்டுள்ளது. உயர் பாதுகாப்பு வலயத்தினுள் செல்வதற்கான போக்குவரத்து ஏற்பாடுகளை 

இராணுவத்தினரே மேற்கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு