மரத்தடியில் மயங்கிக் கிடந்த 4 மாணவர்கள், ஒருவரின் நிலை கவலைக்கிடம்!

ஆசிரியர் - Editor I
மரத்தடியில் மயங்கிக் கிடந்த 4 மாணவர்கள், ஒருவரின் நிலை கவலைக்கிடம்!

ஆரம்ப பாடசாலை ஒன்றின் தரம் 5 இல் கல்வி கற்கும் மாணவர்கள்  நால்வர் மரத்தடியில் மயங்கி விழுந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை (16) குருணாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக  குருணாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நான்கு மாணவர்களும் மரத்தடியிலிருந்து ஏதோ  மாத்திரைகளை உட்கொண்டதாக அங்கிருந்த எனைய மாணவர்கள் கூறியதாக பொலிஸார் தெரிவித்தனர் . 

இந்த மாத்திரைகளை யாராவது இவர்களுக்குக் கொடுத்தார்களா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு