யாழ்.இணுவிலில் ரயிலை வழிமறித்து மக்கள் ஆர்ப்பாட்டம்....

ஆசிரியர் - Editor I
யாழ்.இணுவிலில் ரயிலை வழிமறித்து மக்கள் ஆர்ப்பாட்டம்....

யாழ்.இணுவில் பகுதியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற புகையிரத விபத்தைக் கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த புகையிரத விபத்து இடம்பெற்ற இடத்தில் புகையிரதக் கடவை இல்லை என தெரிவித்தும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அவ்விடத்தில் தமது கடமையை செய்யவில்லை என குறிப்பிட்டும் ஆர்ப்பாட்டம் பிரதேச மக்களால் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது அவ்விடத்தில் ஒன்று கூடிய பொதுமக்கள் ரயில் வருகின்ற பொழுது அதனை மறித்தும் பதாதைகளைத் தாங்கியவாறு கோஷம் எழுப்பி தமது ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

இறந்த உயிரே இறுதியாகட்டும், எங்கள் உயகரைக்காவு கொள்ளாதே!, தினம் தினம் பயந்த பயணமா? ஆகிய கோஷங்கள் தாங்கிய பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டன.

புகையிரதத்தை மறித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் பலத்த கோஷம் எழுப்பினர். இதன்போது பொலிஸார் பொதுமக்களை அகற்ற முயற்சித்ததால் பொலிஸாருக்கும் - பொதுமக்களுக்குமிடையே முறுகல் ஏற்பட்டது. 

மேலும் அப்பகுதியில் விபத்து ஏற்படாதவாறு வலி இதற்கு பிரதேச சபை வேகத் தடுப்புகளையும் நேற்று அமைத்தது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு