யாழ்.நாவற்குழியில் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகிய இ.போ.ச பேருந்து! முன்னால் மோட்டார் சைக்கிளில் சென்றவர் திடீரென திரும்பியதால் விபரீதம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.நாவற்குழியில் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகிய இ.போ.ச பேருந்து! முன்னால் மோட்டார் சைக்கிளில் சென்றவர் திடீரென திரும்பியதால் விபரீதம்..

முன்னால் திரும்பிய மோட்டார் சைக்கிளை முட்டி தள்ளி வீதியை விட்டு விலகி காணிக்குள் புகுந்தது அரச பேருந்து.யாழ்ப்பாணம் தென்மராட்சி - A 9 வீதி, நாவற்குழி பகுதியில் இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் 4.15 மணியளவில் இடம்பெற்றது.

A9 வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் திரும்ப முற்பட்டபோது பின்னால் பயணித்த அரச பேருந்து அதனை முட்டி தள்ளியதோடு பாதையை விட்டு விலகி காணிக்குள் புகுந்துள்ளது.இதன் போது மோட்டார் சைக்கிளுக்கு சேதங்கள் ஏற்பட்டிருந்த போதிலும் அதில் பயணித்த இருவரும் காயங்கள் ஏற்படவில்லை.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு