யாழில் குழந்தை பிரசவித்த இளம் தாய் ஒருவர் உயிரிழப்பு!

ஆசிரியர் - Editor I
யாழில் குழந்தை பிரசவித்த இளம் தாய் ஒருவர் உயிரிழப்பு!

யாழில் குழந்தையை பிரசவித்த இளம் குடும்பப் பெண் ஒருவர் நேற்று முன்தினம் புதன்கிழமை உயிரிழந்துள்ளார். 

மாதகல் மேற்கை சேர்ந்த அருள்டிசாந்தன் கொலஸ்ரிகா (வயது 28) என்பவரே உயிரிழந்துள்ளார். கடந்த 23ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், 

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பின்னர் 24ஆம் திகதி வீடு 

திருப்பியுள்ளார். பின்னர் இவருக்கு வயிற்றோட்டம் ஏற்பட்டதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவேளை குழந்தை பிறந்தது. 

பிறந்த குழந்தை 2 மணித்தியாலங்களில் உயிரிழந்தது. இந்நிலையில் குறித்த, பெண் தொடர்ச்சியாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 

சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு