யாழ்.அச்சுவேலியில் வீதியால் சென்ற இளைஞன் தாக்கப்பட்ட விவகாரம் விசாரணை ஆரம்பம்...

ஆசிரியர் - Editor I
யாழ்.அச்சுவேலியில் வீதியால் சென்ற இளைஞன் தாக்கப்பட்ட விவகாரம் விசாரணை ஆரம்பம்...

அச்சுவேலி பொலிஸ் உத்தியோகத்தர்களின் தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞரொருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

பாதிக்கப்பட்ட நபரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டினை தொடர்ந்து அவரது வாக்குமூலம் நேற்று(01) எம்மால் பதிவுசெய்யப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணப் பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார்.

இதேவேளை சுன்னாகம் பொலிசாரால் கைதுசெய்ப்பட்ட நபரொருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்ற கட்டளையின் பேரில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நபரது வாக்குமூலம் எம்மால் 

யாழ்.சிறைச்சாலைக்கு சென்று பதிவுசெய்யப்பட்டதுடன் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு