யாழ்.சுன்னாகத்தில் கத்திக்குத்து! ஒருவர் பலி, ஒருவர் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.சுன்னாகத்தில் கத்திக்குத்து! ஒருவர் பலி, ஒருவர் கைது..

யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியில் இருவரிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சுன்னாகம் கந்தரோடைப் பகுதியைச் சேர்ந்த சந்திரநாதன் கோபிராஜ் என்கிற 36 வயதானவரே உயிரிழந்துள்ளார்.

இருவரிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி ஒருவர் மீது கத்திக் குத்து நடத்தப்பட்டது.

கத்திக் குத்துக்கு இலக்காகியவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்ததுள்ளார்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய அதே பகுதியை சேர்ந்த ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு