மதுபோதையில் சிறுவர்களை படகில் ஏற்றிக்கொண்டு சாகசம் புரிந்த நபர்! பயத்தில் கத்திய சிறுவர்களை கண்டு விரைந்து காப்பாற்றிய கடற்படை - யாழ்.மயிலிட்டியில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
மதுபோதையில் சிறுவர்களை படகில் ஏற்றிக்கொண்டு சாகசம் புரிந்த நபர்! பயத்தில் கத்திய சிறுவர்களை கண்டு விரைந்து காப்பாற்றிய கடற்படை - யாழ்.மயிலிட்டியில் சம்பவம்..

யாழ்ப்பாணத்தில் ஆபத்தான படகு பயணத்தில் ஈடுபட்டிருந்த இரு சிறுவர்கள் உள்ளிட்ட மூவரை கடற்படையினர் மீட்டு கரை சேர்த்துள்ளனர். 

மயிலிட்டி கடல் பகுதியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை குடும்பஸ்தர் ஒருவர் தனது இரண்டு வயது பிள்ளையையும் , தனது சகோதரியின் 7 வயது மகளையும் படகில் ஏற்றி கடலில் ஆபத்தான முறையில் படகை செலுத்தியுள்ளார். 

அதன்போது, படகினுள் கடற்தண்ணீர் உட்புகுந்ததுடன் , படகில் இருந்த பிள்ளைகளும் பயத்தில் கத்தியுள்ளனர். அதனை கடலில் சுற்றுக்காவல் (ரோந்து) பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் கண்ணுற்று, 

அவ்விடத்திற்கு விரைந்து, படகில் இருந்து பிள்ளைகளை மீட்டதுடன், படகினை கரைக்கு செலுத்துமாறு குடும்பஸ்தருக்கு உத்தரவிட்டனர். 

கரை சேர்ந்த குடும்பஸ்தரை கடுமையாக எச்சரித்த கடற்படையினர், இரு பிள்ளைகளையும் கரையில் பாதுகாப்பாக சேர்ந்தனர். இதேவேளை படகோட்டிய குடும்பஸ்தர் மது போதையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு