யாழ்.வடமராட்சி கிழக்கு - கட்டைக்காட்டில் கடற்படையினர் திடீர் சோதனை!

ஆசிரியர் - Editor I
யாழ்.வடமராட்சி கிழக்கு - கட்டைக்காட்டில் கடற்படையினர் திடீர் சோதனை!

யாழ்.வடமராட்சி கிழக்கு - கட்டைக்காட்டு பகுதியில் தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகள் வெற்றிலைக்கேணி கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். 

இன்று வெள்ளிக்கிழமை (19) அதிகாலை குறித்த பகுதியிலுள்ள மீனவர்களையும், அவர்களது படகுகளையும் கடற்படையினர் சோதனையிட்டனர். 

இதன்போது தடைசெய்யப்பட்ட தங்கூசி வலைகளை வைத்திருந்த மீனவர்களிடம் இருந்து குறித்த வலைகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். 

கட்டைக்காட்டில் பகுதியில் சட்டவிரோத சுருக்குவலை தொழில் இடம்பெறுவதாக தகவல் கிடைத்ததாகவும் கடற்படையினர் சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்தபோது சுருக்கு வலை அகப்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

 அத்துடன் அதிகளவு தங்கூசிவலைகள் கைப்பற்றப்பட்டதோடு கைப்பற்றப்பட்ட வலைகளை அழிக்கும் நடவடிக்கையில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு