யாழ்.உடுவில் - மல்வம் பகுதியில் வீடு உடைத்துக் கொள்ளை! 20 வயதான ஒருவர் கைது...

ஆசிரியர் - Editor I
யாழ்.உடுவில் - மல்வம் பகுதியில் வீடு உடைத்துக் கொள்ளை! 20 வயதான ஒருவர் கைது...

யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் - மல்வம் பகுதியில் வீடுடைத்து நகை திருடிய குற்றச்சாட்டின் பேரில் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை (18) கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் உடுவில் - மல்வம் பகுதியில் வீடு ஒன்றினை உடைத்து திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு கிடைத்தது.

இந்நிலையில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் போதைப்பொருள் தடுப்பு பொலிஸார் இன்று மல்வம் பகுதியில் வசிக்கும் 20 வயதுடைய இளைஞர் ஒருவரை கைது செய்தனர்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் நல்லூர் மற்றும் மல்வம் பகுதிகளில் விற்பனை செய்யப்பட்ட 5 1/2 பவுண் திருட்டு நகைகள் கைப்பற்றப்பட்டன.

குறித்த சந்தேக நபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு