கைக்குண்டுடன் கைதான திருட்டு சந்தேகநபருக்கு கைகுண்டு வழங்கியது இராணுவமா?

ஆசிரியர் - Editor I
கைக்குண்டுடன் கைதான திருட்டு சந்தேகநபருக்கு கைகுண்டு வழங்கியது இராணுவமா?

யாழ்ப்பாணத்தில் கைக்குண்டுடன் கைது செய்யப்பட்ட இளைஞனுக்கு இராணுவ சிப்பாய் ஒருவரே கைக்குண்டை வழங்கி இருந்தார் என பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இளவாலை பொலிஸ் பிரிவில் இளைஞன் ஒருவர் கைக்குண்டு ஒன்றுடன் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட இளைஞனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்தபோது , பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையமை தெரிய வந்துள்ளது.

அத்துடன் கைக்குண்டை இராணுவ சிப்பாய் ஒருவரே தனக்கு தந்தார் எனவும் சந்தேக நபர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

அதன் அடிப்படையில் திருட்டு பொருட்களை இளைஞனிடம் வாங்கிய குற்றச்சாட்டில் ,நேற்றைய தினம் திங்கட்கிழமை  சாவகச்சேரி பகுதியை சேர்ந்த மற்றுமொரு இளைஞனை பொலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இளைஞனிடம் இருந்து திருட்டு பொருட்களான , இலத்திரனியல் பொருட்களை பொலிஸார் மீட்டனர்.

இருவரையும் பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு