யாழ்.இளவாலையில் கைக்குண்டுடன் சிக்கிய இளைஞன்!

ஆசிரியர் - Editor I
யாழ்.இளவாலையில் கைக்குண்டுடன் சிக்கிய இளைஞன்!

யாழ்ப்பாணம் - இளவாலை பகுதியில் கைக்குண்டுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பொலிஸார் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்தபோது, 

வீதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த இளைஞனை வழிமறித்து சோதனையிட்டபோது , இளைஞனின் உடைமையில் இருந்து கைக்குண்டை மீட்டுள்ளனர்.

அதனை தொடர்ந்து இளைஞனை கைது செய்த பொலிஸார், பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்தபோது , திருட்டு சம்பவங்கள் சிலவற்றுடன் இளைஞனுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

தொடர்ந்தும் இளைஞனை பொலிஸ் காவலில் வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு