பிரிட்டன் இளவரசி கலந்துகொண்ட நிகழ்வில் செய்தி சேகரிக்க ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு!

ஆசிரியர் - Editor I
பிரிட்டன் இளவரசி கலந்துகொண்ட நிகழ்வில் செய்தி சேகரிக்க ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு!

இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருக்கும் பிரித்தானிய ஆன் இளவரசி மற்றும் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு இன்று வியாழக்கிழமை விஜயம் செய்யவுள்ளனர்.

இந்நிலையில் இளவரசி விஜயம் செய்யும் இடங்களில் பிரதான ஊடகங்களின் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்க அனுமதிக்கப்படவில்லை.

ஆனால் ஊடகவியலாளர் என கூறப்பட்டு சிலர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்.பொதுசன நூலகத்திற்கு இளவரசி வருகைதரவுள்ள நிலையில் செய்தி சேகரிக்க சென்ற பிரதான ஊடகங்களின் ஊடகவியலாளர்கள் அனுமதி மறுக்கப்பட்டமை ஊடகவியலாளர்கள் இடையே கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

உதயன் பத்திரிகை , வலம்புரி பத்திரிகை, சக்தி தொலைக்காட்சி, டான் தொலைக்காட்சி, ஹிரு தொலைக்காட்சி, தெரண தொலைக்காட்சி, சூரியன் வானொலி உள்ளிட்ட பல பிரதான ஊடகங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

அத்துடன் வடக்கு மாகாண ஆளுநரின் ஊடகப்பிரிவை சேர்ந்தவர்களுக்கும் அனுமதியளிக்கபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு