யாழ்ப்பாணத்தில் இருந்து சபரிமலைக்கு யாத்திரை சென்றவர் விமானத்தில் உயிரிழப்பு!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணத்தில் இருந்து சபரிமலைக்கு யாத்திரை சென்றவர் விமானத்தில் உயிரிழப்பு!

யாழ்.தெல்லிப்பழையை சேர்ந்த ஜயப்ப பக்தரான மோகனதாஸ் (வயது 49) என்பவர் தனது ஐயப்ப பக்த நண்பர்களுடன் சபரிமலைக்கு செல்ல விமானம் மூலம் சென்றவர் விமானத்தில் சுகயீனமடைந்து உயிரிழந்துள்ளார்.

விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது மோகனதாசுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், விமானத்தில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. 

எனினும் அவரது உடல்நிலை மோசமானதால் இதுபற்றி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு அவசர கால மருத்துவ உதவிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விமானம் சென்னையில் தரையிறங்கியதும் தயாராக இருந்த மருத்துவ குழுவினர் விமானத்தில் ஏறி மோகனதாஸை பரிசோதனை செய்த போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த விமான நிலைய பொலிஸார் சடலத்தை மீட்டு  பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

நண்பர்களுடன் இருமுடி கட்டி சபரிமலைக்கு செல்ல வந்த மோகனதாஸ் இறந்ததால் அவரது உடலை மீண்டும் இலங்கைக்கு கொண்டு செல்ல இலங்கை தூதரக அதிகாரிகள் மூலம் பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு