வடக்கு ஆளுநருடன் கனேடியத் தூதுவர் சந்திப்பு!

ஆசிரியர் - Editor IV
வடக்கு ஆளுநருடன் கனேடியத் தூதுவர் சந்திப்பு!

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷ், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.

இதன் போது, கனடாவிலிருந்து வருகைதரும் பலர் வடக்கில் முதலீடுகளை மேற்கொள்ள ஆர்வம் காட்டுகின்றமை தொடர்பில் ஆளுநர் தனது மகிழ்ச்சியை தெரிவித்தார்.

மேலும், நாட்டில் பொருளாதார ஆணைக்குழுவை ஸ்தாபித்ததன் பின்னர் முதலீடுகளை மேற்கொள்வதில் காணப்படும் சிக்கல்களுக்கான தீர்வுகள் எட்டப்படும் என ஆளுநர் தெரிவித்தார்.

அத்துடன் வடக்கில் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ள பசுமை சக்திவள திட்டங்கள் , பொருளாதார அபிவிருத்தி திட்டங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு