யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் மீண்டும் பாரிய சுற்றிவளைப்பு தேடுதல்...

ஆசிரியர் - Editor I
யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் மீண்டும் பாரிய சுற்றிவளைப்பு தேடுதல்...

யாழ்ப்பாணம் இ.போ.ச. பேருந்து நிலையம் மற்றும் எழுதுமட்டுவாள் பகுதிகளில்  விசேட சோதனை நடவடிக்கைள் நேற்றைய தினம் மாலைவேளை இடம்பெற்றது.


யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத்தின் வழிகாட்டலில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விஷாந்தவின் கீழ் அதிரடிப் படையினருடன் இணைந்து மோப்பநாய்களுடன் பொலிஸார் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இதன்போது பேருந்துகளிலுள்ள பயணிகள் சோதனையிடப்பட்டு போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்கான தொலைபேசி இலக்கங்களும் வழங்கப்பட்டதுடன் பேருந்துகளில் ஸ்ரிக்கர்களும் காட்சிப்படுத்தப்பட்டன.

மேலும் எழுதுமட்டுவாழ் பகுதியிலும் நேற்றைய தினம் சென்ற பேருந்துகளை வழிமறித்து விசேட சோதனைகளும் இடம்பெற்றன.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு