ஐனாதிபதியுடனான சந்திப்பை புறக்கணித்த நல்லை ஆதீனம்!

ஆசிரியர் - Editor I
ஐனாதிபதியுடனான சந்திப்பை புறக்கணித்த நல்லை ஆதீனம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பை நல்லை ஆதீன குரு முதல்வர் ஶ்ரீலஶ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பராமாச்சாரிய சுவாமிகள் தவிர்த்தார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் சர்வமத தலைவர்களை ஜனாதிபதி சந்திப்பதற்கு ஜனாதிபதி செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு சர்வமத தலைவர்கள் அழைக்கப்பட்டனர்.

குறித்த அழைப்பையே நல்லை ஆதீன குரு முதல்வர் தவிர்த்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உபதலைவரும் நல்லை ஆதீனத்தின் செயலாளருமான ஆறு திருமுருகன், நல்லை ஆதீன குரு முதல்வர் பிறிதொரு இடத்திற்கு சென்று ஜனாதிபதியை சந்திக்க வேண்டிய தேவை நல்லை ஆதீன குரு முதல்வருக்கு இல்லை என தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு