எதிர்ப்பு போராட்டத்தின் மத்தியில் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார் ஐனாதிபதி ரணில்..

ஆசிரியர் - Editor I
எதிர்ப்பு போராட்டத்தின் மத்தியில் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார் ஐனாதிபதி ரணில்..

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உலங்கு வானூர்தி மூலம் யாழ்ப்பாணத்தை இன்று வியாழக்கிழமை (04) மாலை 4 மணியளவில் வந்தடைந்தார்.

யாழ்ப்பாணம் சென்ஜேம்ஸ் பாடசாலை அருகே உலங்கு வானூர்தி மூலம் வந்த ஜனாதிபதி வாகன தொடரணியாக மாவட்ட செயலகத்தை வந்தடைந்தார்.

வடக்கு மாகாணத்திற்கு நான்கு நாள் பயணமாக வந்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து தொடர் சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளார்.

ஜனாதிபதியின் பங்கேற்புடன் யாழ் மாவட்டச் செயலகத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் அபிவிருத்திக் குழுக் கூட்டம் ஆரம்பமானது.

யாழ்ப்பாணம் பழைய பூங்கா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது.

பழைய பூங்கா அருகில் பொலிஸார் வீதித் தடைகளை அமைத்து போராட்டகாரர்களை தடுத்து வைத்துள்ளனர்.

இதேவேளை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அருகில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மூன்று பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பேருந்தில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாண விஜயத்தை முன்னிட்டு பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு