யாழ்.வல்வெட்டித்துறையில் தேன் விற்பதுபோல் பாசாங்கு செய்து மூதாட்டியின் தாலிக்கொடி அறுத்த இருவர் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.வல்வெட்டித்துறையில் தேன் விற்பதுபோல் பாசாங்கு செய்து மூதாட்டியின் தாலிக்கொடி அறுத்த இருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் தேன் விற்பனையில் ஈடுபடுவது போல பாசாங்கு செய்து மூதாட்டியிடம் 7 பவுண் பெறுமதியான தாலியை அறுத்து சென்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.

வல்வெட்டித்துறை தொண்டமானாறு பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் 27ம் திகதி நடைபெற்ற சம்பவம் தொடர்பாகவே இருவரும் கைது செய்யப்பட்டனர்.

கோண்டாவில் மற்றும் தெல்லிப்பழையை பகுதியைச் சேர்ந்த முறையே 50 , 41 வயதானவர்களே கைது செய்யப்பட்டனர்.

காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வல்வெட்டித்துறை பொலிஸாரிடம் சந்தேக நபர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு