யாழ்.கோப்பாயில் பெண் ஒருவர் உட்பட இருவர் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.கோப்பாயில் பெண் ஒருவர் உட்பட இருவர் கைது!

யாழ்.கோப்பாய் பிரிவில் நீண்ட காலமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் பொலிசாரின் விசேட சுற்றிவளைப்பின்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீண்ட நாட்களாக கசிப்பு உற்பத்தி ஈடுபட்டு வருவதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து இன்று விசேட சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது குறித்த இருவரிடமிருந்தும் 15 லிட்டர் கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலீஸ் அத்தியட்சகருக்கு கீழ் இயங்கும்  விசேட குற்றத்தடுப்பு பொலிஸ்  பிரிவினரால் குறித்த கைது சம்பவம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு