யாழ்.பருத்தித்துறை - முனையில் களஞ்சியசாலை ஒன்றில் தீ! இருவர் உடல்கருகி பலி...

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்தித்துறை - முனையில் களஞ்சியசாலை ஒன்றில் தீ! இருவர் உடல்கருகி பலி...

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை முனைப் பகுதியில் களஞ்சியசாலையொன்றில் தீப்பற்றியதில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவம் செவ்வாய்க்கிழமை(02) அதிகாலை வேளை கடற்றொழில் உபகரண களஞ்சியசாலையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

மலையகத்தின் உடப்புசல்லாவ பிள்ளையார் லோமன் தோட்டத்தைச் சேர்ந்த வேலாயுதம் புவனேஸ்வரம் என்ற 46 வயதான ஒருவரும் வேலாயுதம் ரவி என்கிற 38 வயதானவருமே உயிரிழந்துள்ளனர்.

தீப்பற்றியமைக்கான காரணம் தெரியவராத நிலையில் சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு