அனைவருக்கும் நன்றி, பாடகி அஷானி யாழில் தெரிவிப்பு!

ஆசிரியர் - Editor I
அனைவருக்கும் நன்றி, பாடகி அஷானி யாழில் தெரிவிப்பு!

யாழ்.ஊடக அமையத்தால் மலையக பாடகி அசானி பொன்னாடை போர்த்தி நேற்று (31) கெளரவிக்கபட்டார்.

அசானி நன்றி தெரிவிக்கும் முகமாக நேற்று யாழ்.ஊடக அமையத்துக்கு வருகை தந்த போது யாழ்.ஊடக அமையத்தின் தலைவர் கு.செல்வக்குமாரால் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டார்.

இந்திய தொலைக்காட்சியில் சரிகம போட்டியில் கலந்து சிறப்பிக்க காரணமாக இருந்தவர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு ஏனைய வழிகளில் உதவி செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

இந்திய தொலைக்காட்சியில் பாடி இன்று முதன் முதல் யாழ்ப்பாணம் வருகை தந்த போதும் சந்தோஷமாகத் தான் பயணத்தைத் தொடர்கிறேன். பாடல் மூலம்  எனது மக்களுக்கு உதவி செய்ய தயாராக இருக்கிறேன். என்று தெரிவித்ததுடன் தனது காந்தக் குரலால் 3 பாடல்களையும் பாடினார்.

அசானியின் தாயார் கண்ணீர் மல்க உரையாற்றினார். தனது மகளின் திறமையை உலகறியச் செய்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு