பாடசாலை மாணவர்களுடன் விடுதியில் தங்கியிருந்த ஆசிரியை கைது!

ஆசிரியர் - Editor I
பாடசாலை மாணவர்களுடன் விடுதியில் தங்கியிருந்த ஆசிரியை கைது!

அநுராதபுரம் - எப்பாவல பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் 13 வயது பாடசாலை மாணவர்களுடன் தங்கியிருந்த பாடசாலை விளையாட்டு ஆசிரியை எப்பாவல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (28) இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்டவர் பாடசாலையில் விளையாட்டு ஆசிரியையாக கடமையாற்றும் 51 வயதுடைய பெண்ணாவார்.

இவர் குறித்த மாணவர்களது பெற்றோர்களிடம் கடந்த 27 ஆம் திகதி அநுராதபுரம் பொது விளையாட்டரங்கில் இடம்பெற்ற வலைப்பந்தாட்ட விளையாட்டு பயிற்சிக்கு செல்வதாக கூறி மாணவர்களை அழைத்து சென்றுள்ளார்.

இந்நிலையில் இவர் மாணவர்களை  வீடுகளுக்கு அனுப்பாமல் எப்பாவல பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இது தொடர்பில் நபரொருவரிடமிருந்து பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் குறித்த விடுதியில் இருந்து ஆசிரியை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எப்பாவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு