SuperTopAds

யாழ்.நகரில் இரு வர்த்தக நிலையங்கள் தீக்கிரை!

ஆசிரியர் - Editor I
யாழ்.நகரில் இரு வர்த்தக நிலையங்கள் தீக்கிரை!

யாழ்ப்பாண நகர்பகுதியில் பெரிய கடை வீதியில் உள்ள இரண்டு கடைகள் நேற்று இரவு (27) தீப்பற்றி எரிந்துள்ளது.

இதன்போது கடையில் இருந்த பெரும்பாலான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த யாழ் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் தீப்பரவலை கட்டுப்பாடுக்குள் கொண்டு வந்தனர்.

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.