யாழ்.சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையே மோதல் ஒருவர் காயம்!

ஆசிரியர் - Editor I
யாழ்.சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையே மோதல் ஒருவர் காயம்!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இடம்பெற்ற கைக்கலப்பில் காயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை(23) மாலை இடம்பெற்றதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கைக்கலப்பாக மாறியது.

30 வயதான கைதி காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு