யாழ்.போதனா வைத்தியசாலையில் மேலும் 2 டெங்கு நேயாளர் விடுதி திறப்பு!

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலையில் மேலும் 2 டெங்கு நேயாளர் விடுதி திறப்பு!

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து செல்கின்றமையால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தற்காலிகமான இரண்டு விடுதிகள் திறந்து வைக்கப்பட்டது.

குறித்த தகவலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

கடந்த ஒரு சில வாரங்களாக அதிகரித்த அளவில் டெங்கு நோயாளிகள் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதில் குறிப்பாக ஆண் பெண் மருத்துவ விடுதிகளில் நோயாளர்கள் படுக்கைகள் இன்றி பெரும் சிரமப்படுகிறார்கள்.

இந்த நிலைமையை சமாளிப்பதற்காக மேலும் இரு தற்காலிக மருத்துவ விடுதிகள் இன்று திறக்கப்பட்டன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு