மருத்துவர் மற்றும் சட்டத்தரணி வீடுகளை இலக்குவைத்து திருட்டு! 20லட்சம் பெறுமதியான பொருட்களுடன் 3 பேர் கைது..

ஆசிரியர் - Editor I
மருத்துவர் மற்றும் சட்டத்தரணி வீடுகளை இலக்குவைத்து திருட்டு! 20லட்சம் பெறுமதியான பொருட்களுடன் 3 பேர் கைது..

தெஹிவளை பிரதேசத்திலுள்ள வைத்தியர்கள் மற்றும் சட்டதரணிகளின் வீடுகளில் பணம் மற்றும் பொருட்களை திருடிய சந்தேகத்தில் மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களால் திருடப்பட்டதாகக் கூறப்படும் 20 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் மற்றும் போதைப்பொருட்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.    

இவ்வாறு அவர்களால் திருடப்பட்டவற்றில் தங்க நகைகள், மடிக்கணினிகள், தையல் இயந்திரம், பழங்கால பித்தளை பொருட்கள், கைத்தொலைபேசிகள், கறுப்புக் கண்ணாடிகள், சுவர் துளையிடும் இயந்திரங்கள் என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு