கத்தியை காட்டி மிரட்டி கொள்ளை, முன்னாள் இராணுவ சிப்பாய் உள்ளிட்ட இருவர் கைது!

ஆசிரியர் - Editor I
கத்தியை காட்டி மிரட்டி கொள்ளை, முன்னாள் இராணுவ சிப்பாய் உள்ளிட்ட இருவர் கைது!

களுத்துறை பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் கத்தியை காட்டி கொள்ளையிட்ட பிரதான சந்தேக நபரான முன்னாள் இராணுவ சிப்பாய் உள்ளிட்ட இருவர் களுத்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் களுத்துறை - தொடங்கொட பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய புஸ்கொடா என்றழைக்கப்படும் நபரும் அதே பிரதேசத்தை சேர்ந்த 18 வயதுடைய அவரது சகாவும் ஆவர்.

இவர்கள் பாணந்துறை பிரதேசத்தில் வியாபாரி ஒருவரை மன்னா கத்தியினால் தாக்கி காயப்படுத்தி 1 இலட்சத்து 50 ஆயிரம்  ரூபாய் பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டுள்ளமை, 

தனியார் வங்கியொன்றின் ஏரிஎம் நிலையத்திற்குள் நுழைந்து அங்கிருந்த நபரை மன்னா கத்தியால் 5 முறை தாக்கி 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையிட்டுள்ளமை,  

எரிபொருள் நிலையத்திலும் கொள்ளையிட்டுள்ளமை ஆகிய குற்றச்சாட்டின் கீழ் இவர்கள் கைதானமை குறிப்பிடத்தக்கது. 

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு