தொழில் நிமித்தம் கம்பஹா மாவட்டத்திற்கு சென்றிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்த்தரை காணவில்லை..

ஆசிரியர் - Editor I
தொழில் நிமித்தம் கம்பஹா மாவட்டத்திற்கு சென்றிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்த்தரை காணவில்லை..

தொழில் நிமித்தனம் கம்பஹா மாவட்டத்திற்கு சென்ற தனது கணவருடன் இதுவரை எவ்வித தொடர்பும் இல்லையென அவரது மனைவி பொலிஸில் முறைப்பாடளித்துள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் 28 ஆம் திகதி அன்று கம்பஹா மாவட்டத்திற்கு வேலைக்குச் செல்வதாக கூறிவிட்டு சென்ற வத்திராயன்  வடக்கைச் சேர்ந்த கணேசலிங்கம் தினேஸ் எனும் 38 வயதுடைய நபரே காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி மருதங்கேணி  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

வடமராட்சி கிழக்கு வத்திராயனிலிருந்து  கடந்த 28 ஆம் திகதி கம்பஹாவிற்கு சென்றுள்ளதாகவும்,  அங்கு தொடர்ந்தும் வேலை செய்து வருவதாகவும் கடந்த மாதம் 30 ஆம் திகதி காணாமல்போன குறித்த நபர் தன்னுடன் பேசியதாக மனைவி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 30 ஆம் திகதி முதல் இன்றுவரை தனது கணவருடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக மனைவி தெரிவித்துள்ளதுடன் தனது கணவரை கண்டுபிடித்து தர ஆவண செய்து உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

மருதங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ; +94 77 363 3578 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு