ஒரே நாளில் காசாவில் 6 வைத்தியசாலைகள் மீது இஸ்ரேல் கொடூர தாக்குதல்!! -22 பேர் பரிதாப பலி-

ஆசிரியர் - Editor II
ஒரே நாளில் காசாவில் 6 வைத்தியசாலைகள் மீது இஸ்ரேல் கொடூர தாக்குதல்!! -22 பேர் பரிதாப பலி-

காசாவின் வடக்கு பகுதியில் உள்ள வைத்தியசாலைகள் மற்றும் பாடசாலைகள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 22 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் இதுவரை 12,300 பேர் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், காசாவில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10,812 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், இஸ்ரேலிய போர் விமானங்கள் காசாவின் வடக்கு பகுதியில் உள்ள 6 வைத்தியசாலைகள் மற்றும் ஒரு பாடசாலை மீது தாக்குதல் நடத்தியுள்ளன. இதில் குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

அதேபோல் மற்றொரு வைத்தியசாலையில் தரைவழிப் போர் நடந்து கொண்டிருப்பதாகவும் பாலஸ்தீனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

மேலும், காசாவின் பாரிய மருத்துவமனையான அல்-ஷிபாவின் முற்றத்தில் அதிகாலையில் ஏவுகணை தாக்கியதாகவும், இந்தோனேசிய வைத்தியசாலை ஒன்று சேதமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அதேபோல் நாசர் ராண்டிசி குழந்தைகள் புற்றுநோய் வைத்தியசாலைக்கு தீ வைத்ததாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு