மற்றொரு அனர்த்தம் பதிவானது, ஒருவர் வைத்தியசாலையில்! இயந்திரம் இருந்தும் பயனில்லை..

ஆசிரியர் - Editor I
மற்றொரு அனர்த்தம் பதிவானது, ஒருவர் வைத்தியசாலையில்! இயந்திரம் இருந்தும் பயனில்லை..

மோசமான வானிலை காரணமாக கொழும்பு ஆர்.ஏ. டிமெல் அவென்யூவில் மற்றொரு மரம் விழுந்ததில் ஒருவர் காயமடைந்து வைத்தியசபலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (07) மாலை குறித்த மரம் கார் மற்றும் முச்சக்கரவண்டி மீது விழுந்ததில், பயணித்த ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த ஒக்டோபர் மாதம் 6 ஆம் திகதி கொழும்பு ஆர்.ஏ. டிமெல் அவென்யூவில் பஸ் மீது மரம் விழுந்ததில் 5 பேர் உயிரிழந்தனர்.

மேலும், அக்டோபர் 30 ஆம் திகதி அதே வீதியில் மற்றொரு மரம் விழுந்ததில் 3 வாகனங்கள் சேதமடைந்தன.

இந்த பாதுகாப்பற்ற நிலை குறித்து கொழும்பு மாநகர சபையின் ஆணையாளர் திருமதி பத்ராணி ஜயவர்தனவிடம் நாம் வினவியபோது,

நேற்றைய மோசமான வானிலை காரணமாக கொழும்பில் 36 மரங்கள் மற்றும் கிளைகள் முறிந்து வீழ்ந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஆபத்தான மரங்களை அடையாளம் காணும் இயந்திரம் கொழும்பு மாநகர சபையிடம் இருந்தாலும் அதனை பயன்படுத்துவதற்கு ஆள் இல்லை என மாநகர ஆணையாளர் திருமதி பத்ராணி ஜயவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு