பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்!

ஆசிரியர் - Editor I
பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்!

பண மோசடி தொடர்பில் சந்தேகத்தில் தேடப்படும் ஆண் மற்றும் பெண் ஆகியோரைக் கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.

பத்தரமுல்லை வீதியில் தனியார் நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான கட்டடம் மற்றும் தோட்டம் ஒன்றை புனரமைப்பதற்காக இந்தச் சந்தேக நபர்கள் குறித்த நிறுவனத்திடமிருந்து சுமார் ஒரு கோடி ரூபாயை பெற்றுக்கொண்டுள்ளனர்.

இந்த சந்தேக நபர்கள் பெற்றுக்கொண்ட தொகை 9,943,108.03 ரூபாய் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த பணத்துக்கு நிர்மாணப்பணிகளை மேற்கொள்ளாமல் சந்தேக நபர்கள் பணம் மோசடி செய்தமை தொடர்பில் மிரிஹான விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவில் குறித்த நிறுவனம் முறைப்பாடு செய்துள்ளதுடன், அதன்படி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

அதன் அடிப்படையில், விக்னேஸ்வரன் கணேசன் (வயது 31), ரீவல் நிரோஷனி ராஜரத்தினம் (வயது 36) ஆகிய சந்தேக நபர்களே பொலிஸாரால் தேடப்படுகின்றனர்.

இவர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால், விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி 071 - 8137373 அல்லது 011 2852556 ஆகிய இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொலிஸார் கோருகின்றனர்.

சந்தேக நபர்களின் புகைப்படங்கள் இங்கு வெளியிடப்பட்டுள்ளன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு