காதில் இரத்தம் வடிந்த நிலையில் 35 வயதான பெண் சடலமாக மீட்பு!

ஆசிரியர் - Editor I
காதில் இரத்தம் வடிந்த நிலையில் 35 வயதான பெண் சடலமாக மீட்பு!

சூரியவெவ வைத்தியசாலையில் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று புதன்கிழமை (01) காலை, வைத்தியசாலையில் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் சூரியவெவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சூரியவெவ பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடைய  பெண்ணே உயிரிழந்துள்ளார்.

சடலத்தை பரிசோதித்த போது, வலது முழங்கையில் காயம் ஏற்பட்டுள்ளதும் வலது காதில் இரத்தம் கசிந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

இந்த மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு