உறங்கிக் கொண்டிருந்த யாசகரை பெற்றோல் ஊற்றி கொழுத்திய இளைஞன் கைது!

ஆசிரியர் - Editor I
உறங்கிக் கொண்டிருந்த யாசகரை பெற்றோல் ஊற்றி கொழுத்திய இளைஞன் கைது!

வைத்தியசாலைக்கு அருகில் உள்ள ஆய்வுகூடத்துக்கு முன்பாக உறங்கிக் கொண்டிருந்த யாசகர் ஒருவரைக்  கொலை செய்த சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றிரவு (29) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில்,  சந்தேகநபர் யாசகர் ஒருவரை  பெற்றோல் ஊற்றி தீ வைத்து எரித்ததாகவும், 

அயலவர்கள்  அவரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாகவும், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (30) காலை உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

64 வயதுடைய தர்மதாச என்ற நபரே உயிரிழந்துள்ளார். ஹோமாகம, கலவிலவத்த பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு