உணவகம் ஒன்றிலிருந்து யுவதியை கடத்திய கும்பல்! 35 நிமிடங்களில் கடத்தல் கும்பலை மடக்கிய பொலிஸார்...

ஆசிரியர் - Editor I
உணவகம் ஒன்றிலிருந்து யுவதியை கடத்திய கும்பல்! 35 நிமிடங்களில் கடத்தல் கும்பலை மடக்கிய பொலிஸார்...

ஹொரணையில் உள்ள உணவகம் ஒன்றிலிருந்து யுவதி ஒருவரைக் கடத்திச் சென்ற ஜோதிடர் உட்பட மூவர் இரண்டு மணித்தியாலங்கள் 35 நிமிடங்களுக்குள் கைது செய்யப்பட்டதாக ஹொரண தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்டவர்களில் இளம்பெண் ஒருவரும் அவரது சகோதரர் மற்றும் கடத்தப்பட்ட யுவதியுடன் காதல் தொடர்பு வைத்ததாகக் கூறப்படும் நபரும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த யுவதியை கடத்த பயன்படுத்திய வாடகை காரையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

119 என்ற பொலிஸ் அவசர இலக்கத்தின் ஊடாக ஹொரணை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலின்படி, உடனடியாக ஹோட்டலுக்கு வந்து முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டு, பின்னர், சந்தேக நபர்களை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு