இன்று முதல் அதிகரிக்கும் மின் கட்டணம்!!

ஆசிரியர் - Editor I
இன்று முதல் அதிகரிக்கும் மின் கட்டணம்!!

இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு அமைய, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று (20) மின் கட்டண அதிகரிப்புக்கு அனுமதி வழங்க தீர்மானித்திருந்தது.

அதன்படி இன்று முதல் மின்கட்டண திருத்தம் பின்வருமாறு இடம்பெறவுள்ளது.

0-30 வரையான அலகுகளுக்கான நிலையான கட்டணம்  150 ரூபாவில் இருந்து 180 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.. குறித்த  வகுப்பின் மின் அலகு ஒன்றின் விலை 12 ரூபாய் ஆகும்.

31 முதல் 60 வரையான அலகுகளுக்கான நிலையான கட்டணம் 300 ரூபாவில்  இருந்து  360 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.. குறித்த  வகுப்பின் மின் அலகு ஒன்றின் விலை 30 ரூபாய் ஆகும்.

61 முதல் 90 வரையான அலகுகளுக்கான நிலையான கட்டணம் 400 ரூபாவில்  இருந்து  480 ரூபாவாகவும்,  91 முதல் 120 வரையான  அலகுகளுக்கான நிலையான கட்டணம் 1000 ரூபாவில்  இருந்து  1180 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது..

மேலும், 121 முதல்180 வரையான அலகுகளுக்கான நிலையான கட்டணம் 1,500 ரூபாவில்  இருந்து  1,770 ரூபாவாகவும்,  180  அலகுகளுக்கு மேல் நிலையான கட்டணம் 2,000 ரூபாவில்  இருந்து  2,360 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது..

இன்று முதல் 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை மின் கட்டண அதிகரிப்பு அமுலில் இருக்கும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஒரு அலகுக்கான கட்டணங்கள் மேலே காட்டப்பட்டுள்ளன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு