யாழ்.சுன்னாகம் - அச்சுவேலி பகுதிகளில் திடீர் சோதனை! 5 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு...

ஆசிரியர் - Editor I
யாழ்.சுன்னாகம் - அச்சுவேலி பகுதிகளில் திடீர் சோதனை! 5 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு...

யாழ்.சுன்னாகம் அச்சுவேலி பகுதிகளில் யாழ்.மாவட்ட அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் பிரிவினர் நேற்று திடீர் சோதனை நடத்தியுள்ளனர்.

இதன்போது, அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தால் அங்கீகரிக்கப்படாத மற்றும் நடப்பாண்டில் முத்திரை பதிக்கப்படாத தராசுகளை பயன்படுத்திய  5 வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை  எடுக்கப்பட்டது.

அத்துடன் இனிவரும் காலங்களில் தராசு அல்லது அளக்கும் உபகரணங்களை வியாபார நோக்கத்திற்காக பயன்படுத்தும் வியாபார நிலையங்களிலும் திடீர் பரிசோதனை மேற்கொள்ளபடவுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு