உல்லாச படகு கவிழ்ந்த விபத்து!! -குழந்தைகள் உட்பட 21பேர் பலி: பலர் மாயமானதால் அச்சம்-

ஆசிரியர் - Editor II
உல்லாச படகு கவிழ்ந்த விபத்து!! -குழந்தைகள் உட்பட 21பேர் பலி: பலர் மாயமானதால் அச்சம்-

இந்தியாவின் மாநிலம் கேரளாவில் உல்லாச படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 21 பேர் பலியான துயர சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த மாநிலம் மலப்புரம் மாவட்டம் துவல்திரம் கடற்கரையில், இரு அடுக்கு சுற்றுலா படகு ஒன்று 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்றுகொண்டிருந்தது.

தனூர் பகுதியில் இரவு 7 மணியளவில் படகு சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கடலில் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.

இந்த திடீர் விபத்தில் கடலில் மூழ்கி 9 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல் வெளியானது. இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதில் 5 குழந்தைகள் மற்றும் பெண்கள் அடங்குவர். மேலும் சிலர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், சில பயணிகள் கடலில் மூழ்கி மயமானதால் அவர்களை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

கேரளாவில் சுற்றுலா படகு பயணம் மாலை 5 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 7 மணி வரை சவாரி மேற்கொள்ளப்பட்டது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.    

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு